உலகப்புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கோபுரம் இடிந்து விழுந்ததால், வேதனையடைந்த பக்தர்கள், இதை அபசகுனமாக கருதி, இதனால் தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்து வரும் என கலக்கமடைந்துள்ளனர்.