ராணிப்பேட்டை சிப்காட்-க்குள் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல் தொழிற்சாலை தொட்டியை சுத்தப்படுத்த இறங்கிய நால்வரில் தமிழ்செல்வன் என்பவர் உயிரிழந்தார். மயங்கி விழுந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.