தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர்.ஆர்.நகர், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர்,
பி.ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், எம்.ஆர். நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம் பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மதுரை: மேலூர் அருகே கொட்டாம்பட்டி மற்றும் மேலவளவு துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின் பராமரிப்பு பணி நடக்கிறது. அதன்படி, கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, மனல்மேல்பட்டி, உதினிபட்டி, பள்ளப்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, பட்டூர், ஆலம்பட்டி, செக்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவள்ளூர்: இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பிரையாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்ஜிஆர் நகர், ஶ்ரீதேவி குப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மா பேட்டை அகரம், வெண்மனம்புதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.