நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளதாக மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..

நடிகர் விஜயின் லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். வன்முறை மற்றும் போதை பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். மதுரையை சேர்ந்த ராஜமுருகன் தொடர்ந்து வழக்கும் விசாரணையை ஐகோர்ட் கிளை ஒத்தி வைத்தது.