காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் அறிவித்துள்ளார். காங்., அறக்கட்டளையின் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் புதிய பயணத்தை தொடங்க இருப்பதால் காங்., கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.