மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன. இன்று மெய்தெய் மற்றும் குகி இன மக்களுக்கு எதிரான போரில் 9 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.