மா விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிபிராஜ் சிங் சவுக்கானுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் உற்பத்தியாகி உள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மாம்பழச்சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். மாம்பழ கூழுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50: 50 பகிர்வு முறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாக தமிழ்நாட்டில் PM- AASHA சந்தை தலையிட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.