விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள், அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்பதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளன. அரசு விடுமுறை நாளான இன்று மாணவர்களையும் பள்ளிக்கு வர சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.