மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்திருக்கும் கலவரத்தில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தோபுல் மாவட்டத்தில் மேலும் 12 பேர் வரை தாக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மெய்தெய் இன இஸ்லாமிய மக்கள். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மெய்தெய் – குக்கி மோதலில் இந்த இனக்குழுவை சேர்ந்த மக்கள் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.