2012 ஆம் ஆண்டு தனியார் பள்ளி மாணவி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமி ஸ்ருதி மரணம் தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி உத்தரவிட்டுள்ளார். 2012 ஜூன் 25ல் நடந்த சம்பவத்தில் பள்ளித் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.