இலங்கையில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து  பொலநறுவை அருகே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் ஈழத்தமிழர்கள் என கூறப்படுகிறது.