பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரையடுத்து பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்கலை., யில் தனது துறைக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கணிப்பொறி, இணையதளம் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டது தணிக்கை குழு ஆய்வில் நிரூபணமான நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.