மிக்ஜாம் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 800 கி.மீ. கிழக்கே தற்போது மையம் கொண்டுள்ளது. டிச. 3ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, 4ம் தேதி மாலை சென்னை – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும்.