புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாக்க சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் 4 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.