
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை கோவையில் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அதாவது கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி எஸ்.ஏ பாஷா அண்மையில் காலமானார். அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை மறைமுகமாக அனுமதி கொடுத்ததாக கூறி பாஜகவினர் கோவை காந்திபுரத்தில் இன்று கருப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இவர்கள் கருப்பு தின பேரணி நடத்தினர். மேலும் தடையை மீறி பேரணி நடத்தியதாக கூறி பாஜகவினரையும் அண்ணாமலையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.