புதுச்சேரி முதலியார்பேட்டையில் இளநீர் வியாபாரி ரமேஷ் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BJP அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் அங்கு ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலைசெய்யப்பட்ட நிலையில், தற்போது ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது