கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடிலிகி தொகுதி பாஜக MLA என்.ஒய்.கோபால கிருஷ்ணன் பாஜக கட்சியில் இருந்து
விலகுவதாக கூறி, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். இவர்
விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு பாஜகவில் மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என கூறியதையடுத்து, கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.