ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

9 மணி வரை 22,973 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் விதிமுறைகளை திமுகவினர் மீறுகிறது என்று  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார்.