“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் முதல் அதிகாரபூர்வ கூட்டம் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது