ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது