இந்த மாதம் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக விசேஷ நாட்களில் தமிழக அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சுமார் 16, 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 19-ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அந்த கூட்டம் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது . சென்னையில் மட்டும் 10,500 பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சுமார் 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.