வாணியம்பாடி அருகே சென்னை மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதியதில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.