தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களில் வெல்லும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. பாஜகவிடமிருந்து பெண்களை காக்க வேண்டிய தேவை உள்ளது. தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறியவர் பெரியார் கொள்கைகள் பற்றி பதில் அளித்த பிறகு பாஜக கொடியை தமிழ்நாட்டில் ஏற்ற வேண்டும் என மக்கள் கூற வேண்டும் என தெரிவித்தார்.