நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதால் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சத்ய பிரதா சாகு உடனும், நாளை மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறையினருடனும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.