கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து எதிரொலியாக இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்தார். சென்னை எழிலகத்தில் சற்றுநேரத்தில் விபத்து குறித்து செய்தியாளர்களை சந்திக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்தும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி தொடர்பாகவும் அறிவிப்பை வெளியிடவுள்ளார்.