தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் டாஸ்மாக்கில் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். ஆனால் இன்று அந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று சபாநாயகர் கூறினார். இந்நிலையில் முன்னறிவிப்பு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி பேச அனுமதி கோரிய நிலையில் அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். இதனால் இருக்கையில் இருந்து எழுந்து தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனவே அவை மரபுகளை கடைப்பிடித்து அமைதியாக இருங்கள் என்ற முதல்வர் ஸ்டாலின் கூறிய போதிலும் அவர்கள் தொடர்ந்து அமளியில்  ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கலை அவையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதாவது சபாநாயகரின் இருக்கை அருகே சென்று அவர்கள் முழக்கமிட்டதால் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் தற்போது அதிமுக எம்எல்ஏக்களை இன்று ஒரு நாள் மட்டும் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.