தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் தொடரும் என்றும் அதுபோக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். குறிப்பாக எல் நினோவால் 12 மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 2026-27 ஆம் ஆண்டில் மும்முனை மின்சாரம் வழங்குவதற்காக ரூ.7432 கோடி மின்வாரியத்திற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்துக்கு ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.

மண்ணின் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு.

பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு. ரூ.27.21 கோடி ஒதுக்கீடு

காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேத தடுப்பு திட்டம் உருவாக்கப்பட்ட அதற்காக ரூ.7.35 கோடி ஒதுக்கீடு.5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிகளுக்கான நம்மாழ்வார் மீது வழங்கப்படும் நிலையில் அதற்காக 11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் காடுகள் 11 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.