ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு வருகிற மே மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் உள்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலி பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 315 காலில் பணியிடங்களுக்கும் வருகிற மே மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.