
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் இந்த ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏற்கனவே காரைக்கால் மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.