திருத்தணி அருகே காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் தலையில் கல்லால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அம்மையார்குப்பம் பகுதியில் நகரத் துணைத் தலைவராக இருந்தார். நெசவு தொழிலாளியான இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்.

இந்நிலையில் வீட்டின் பின்புறம் ராஜேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்த நிலையில்எதற்காக கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.