
விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான உற்பத்தி தொழிற்சாலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்துகின்றனர். கல்லாக்கோட்டையில் துணை ராணுவ படையோடு, 5 அதிகாரிகள் கடந்த 2 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்