
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
அதன்படி மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் 52 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்து விட்டது. மேலும் இதனால் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க இருக்கிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக ஹேமந்த் சோரன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.