சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து
வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது கட்டடத்தின் மேல் இருக்கும் பெயர் பலகையில் தீப்பிடித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.