சீமான் மீதான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது. அரசியல் பலம், ஆள் பலம் இருக்கும் சீமானுக்கு எதிரான தனது போராட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரை எதிர்க்க தமிழ்நாட்டில் ஒரு ஆள் கூட இல்லை எனக் கூறி புகாரை திரும்ப பெற்றுள்ளார். இதனால், பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து சீமானுக்கு விலக்கு தரப்பட்டுள்ளது