மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கடந்த வாரம் மதுராந்தகத்தில் போலி மதுவை குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனியை சேர்ந்த சிவசக்தி மதுராந்தக டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.