காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் 6.40 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். அதே போல், வரிசையில் நின்று இந்திய குடிமகனாக தனது கடமையை நிறைவேற்ற வந்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதிக்க மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.