கனடாவில் வசித்துவரும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காலிஸ்தான் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என கனடா குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்தியர்கள் மீது கனடாவில் வெறுப்புணர்வு பரப்பப்படுவதால், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.