திருப்பூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் இவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இவரை அரிவாளால் வெட்டிய நிலையில் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவருடைய மனைவி அலமாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகியோர் தடுக்க வந்துள்ளனர்.

அவர்களையும் மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த பிறகு வீடு புகுந்து பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.