அமைச்சர் KKSSRR-ஐ விடுவித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், முடித்துவைக்கப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் தரப்பு வாதிட்டது.

இதனையடுத்து, ஐகோர்ட் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று நீதிபதி விசாரித்தாரா என்பது குறித்து அறிக்கை தர ஐகோர்ட் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.