கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி நடந்து முடிந்த நிலையில் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. 224 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்க 113 இடங்களுக்கு மேல் தேவை. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிய வந்ததால் தேர்தல் முடிவுகளை அறிய நாடே எதிர்பார்க்கிறது.