18-வது ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. இதனால் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது எதிர்பாராத விதமாக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் ஆர்சிபி நிர்வாகம் சேர்ந்து தலா 10 லட்ச ரூபாய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில் தற்போது முதல்வர் சித்தராமையா ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாயோடு சேர்த்து தலா 25 லட்சமாக நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.