பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் வெளிப்படையாகவே ராமதாஸ் அதனை கூறிவிட்டார். அவர்கள் இருவருக்குள்ளும் சமாதானம் செய்து வைக்க கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பாமகவினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சமாதான பேச்சுவார்த்தைகள் எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராமதாஸ் பேச்சம் அமைந்துள்ளது. அதாவது இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியுடன் பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது என்று கூறினார்.

அதாவது அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எதுவும் கட்டப்படவில்லை எனவும் பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது என்றும் கூறினார். அதன் பிறகு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று நான் கூறியும் அதனை அன்புமணி நம்பவில்லை. ஐயாவை நம்ப முடியாது எழுதி கொடுக்க சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

எனக்குள் இருந்த கோபம் உடனே பொங்கி எழுந்தது. எனவே நீயா நானா என்று முடிவு செய்து விடுவோம் என பார்த்துவிட்டேன். இதுதான் என் முடிவு என்று கூறினார். மேலும் குலசாமி என்று கூறிக்கொண்டு என் நெஞ்சில் குத்துகிறார்கள். எல்லாம் ஐயா தான் என்று சொல்லிக் கொண்டே என்னை பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள் என்று வேதனையோடு கூறினார்.

அதன்பிறகு நான்தான் பாமக கட்சியின் தலைவர் என்றும் அன்புமணி தலைவர் கிடையாது என்றும் கூறினார். அதோடு இன்னும் ஒரு சில  ஆண்டுகள் எனக்கு தலைவராக நீடிக்க உரிமை இல்லையா என்றும் கேட்டார். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது. இதுவே நீதி, நேர்மை மற்றும் தர்மம் என்று கூறினார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்சியை நானே பார்த்துக்கொள்கிறேன் என அன்புமணி கேட்டு நிலையில் அதற்கான அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை இப்போதுதான் புரிகிறது என்றும் கூறினார். மேலும் முன்னதாக நான் தான் தலைவராக நீடிக்கிறேன் என அன்புமணி கூறிய நிலையில் தற்போது மீண்டும் நான் தான் தலைவர் என ராமதாஸ் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது ‌