அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுக்குழு வழக்கு எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு வழக்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டுள்ளார்.
Breaking: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா…? சென்னை உயர் நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி…. சென்னையில் சோகம்….!!!
சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை…
Read moreபிறப்பு, இறப்பு பதிவுக்கு புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வந்த பிறப்பு, இறப்பு விவரங்கள் தற்போது மருத்துவமனை வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்று நகல்கள் தேவைப்படுவோர் எழுத்துப்பூர்வமாக…
Read more