தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை. மேலும் அரையாண்டு தேர்வை முன்னிட்டு பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வுகள் ஜனவரி 2 முதல் 10-ம் தேதிக்குள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.