தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் திமுகவுக்கு எதிரான அணி ஒன்று சேர வேண்டும் என்று கூறுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, எல்லாரும் ஒரு அணியில் இருந்து திமுகவை ஒழிக்க வேண்டும்.

அதேபோன்று அந்த அணி பாஜகவை வர விடக் கூடாது எல்லோரும் ஒரு அணியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பாஜகவை ஒழிக்க வேண்டும் என்று திமுக நினைக்கிறது. அதேபோன்று திமுகவை ஒழிக்க வேண்டும் என்று அதிமுக நினைக்கின்றது. எங்களுக்கும் ஒரு அணி இருக்கிறது.

திமுக, அதிமுக இந்த இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு என்று அவர் கூறினார். ஒரு தீமையை, தீமையை வைத்து ஒழிக்க முடியாது. தீமைக்கு நன்மைதான் மாற்று. இதை ஒழிக்கணும். ஆதலால் இது எங்களுக்கு சரி வராது நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம் என்று கூறினார்.