நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவராக இருப்பதோடு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்திலும் உள்ளார். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். மேலும் அதனை முறையாக பதிவு செய்து கட்சிக்கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்துள்ளார். தற்போது இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி வி சாலையில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைவர்களின் கட்டவுட்டில் தொடங்கி பிரம்மாண்டமான மேடை, பல்லாயிரம் பேர் அமரும் இடம் , உணவு வழங்கும் இடம் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவர்கள் என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் 2 மணி நேரம் பேச இருக்கின்ற நிலையில் அதனை காண ஏராளமான ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜயின் பாதுகாப்பிற்காக துபாயை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் இருந்து பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். Gentur எனப்படும் துபாய் நிறுவனத்தை தான் விஜய் தனது பாதுகாப்பிற்காக நியமித்துள்ளார். இந்த நிறுவனத்தின் பவுஞ்சர்கள் விஜய்க்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். மேலும் இவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்புகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயன் மாநாடு நடைபெற உள்ள திடலை ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த நிறுவனம் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாகவும், வெளி ஆட்கள் யாரையும் இந்த திடலுக்குள் அனுமதிக்காமல் கடும் கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பை பலப்படுத்தியும் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்து செல்வது முதல் நிகழ்ச்சி முடிந்து அவரை பாதுகாப்பாக வைக்கும் வரை இந்த நிறுவனத்தின் பொறுப்பு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.