
பாஜகவின் B TEAM ஆக சீமான் செயல்படுகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல் வதந்திகளை பாஜகவும் நாம் தமிழர் கட்சியும் பரப்புவதாக தெரிவித்தார்.
அம்பை கைது செய்வதை விட அம்பு எய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார். வட மாநில தொழிலாளர்களுக்கு மொழி இல்லை, சாதி இல்லை என்று கூறிய அவர் கைகள் உண்டு, வாய்கள் உண்டு, வயிறு உண்டு. ஆகையால் தான் வடமாநில தொழிலாளர்கள் உழைக்க வருகிறார்கள் என்று தெரிவித்தார்.