மத்தியபிரதேசம் மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் இறுதியில் ஆட்சிக் காலம் முடியவுள்ள நிலையில், தற்போதே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் பஞ்சாயத்து அமைச்சரான மகேந்திர சிங் சிசோடியா அங்குள்ள குணா மாவட்டத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது “வரும் 2023 சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் ஆட்சி தான், நீங்கள் அனைவரும் பாஜகவில் இணைந்து விடுங்கள். இல்லையெனில் உங்களது வீட்டிற்கு புல்டோசர் வரும் என மிரட்டும் வகையில் அவர் பேசி உள்ளார். இவ்வாறு பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் மிரட்டும் வகையில் அமைச்சர் பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.