ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக. 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில் மார்ச் 30, 2023 வரை கொடுக்கப்பட்ட அவகாசம் பின்னர் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தி, ஆதார் – பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலற்றதாகிவிடும். அப்படி இணைக்காவிட்டால் பான் அட்டை செயலற்றதாகிவிடும். இந்த பான் அட்டை மூலம் வரிதாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வரி தாக்கல் நடைமுறையில் மேற்கொள்ளப்படாது. மேலும் நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்டு தொகையும் செயலற்ற அந்த பான் அட்டைக்கு செலுத்தப்படாது. இது போன்ற பல்வேறு சிக்கல்களை ஆதார்- பான் இணைகாதவர்கள் நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.