நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. லீக் சுற்றுகளில் எந்த தோல்வியையும் சந்திக்காமல் 10 தொடர் வெற்றிகள் உடன் இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா கோப்பையை வெல்ல முடியாமல் சென்றது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உலக கோப்பையை வைத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஒரு கையில் பீருடன்,  உலக கோப்பை மீது கால் வைத்து புகைப்படம் எடுத்தது வைரல் ஆகி வருகிறது.

இதனால் ஆஸ்திரேலியா அணி வீரர் ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பையை அவமதித்துள்ளார் என்று #MitchellMarsh என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.